Thursday, May 25, 2006

எதை நோக்கி...

முடுக்கப்பட்ட விசை தறிகளாய் ஓட்டம்..
சாவிக்கு ஆடும் பொம்மைகளாய் நினைவோட்டம்..
எதை நோக்கி....எதை நோக்கி...

அர்த்தமுள்ள வாழ்வை..அற்ப பொருட்கள் ஆட்டுவிக்கிறது.
அமைதி உள்ளெ இருக்க அலை அலையாய் ஆர்பரித்து
அதை வெளி தேடும் விந்தை...

மனித மனம் உள்ளெ விரியும் அனிச்ச மலரை முகந்தறிய மறந்து
வெளியே காகித பூக்களில்... வாசனை தேடும் விந்தை..

நான்.....நான் என்ற சொல்லை அகந்தையாய் பார்பது இயல்பு..
நான்.....நான் மட்டுமே எனக்கு என தெரிவது...
அகம் காட்டும் விந்தை..அதுவே..சாஸ்வதமும்..

என்னுள்ளெ என்னை தேடி தேன் துளிகளை சுவைக்க மறந்த மனம்..
என்னை வெளியே தேடி சமுத்திரமாய்..
ப்ரவாகம் எடுக்கும் முயற்சிவிந்தை தான்...ஆனால் வீணே...

9 comments:

வவ்வால் said...

வணக்கம் செளமியா!

வாவ்..வாவ் எடுத்ததுமே நாலு கால் பாய்ச்சலில் புள்ளி மான் போல துள்ளி போறிங்க அருமையான கவிதை. மேலும் பல கவிதைகள் படைத்து கவிப் பேரரசி ஆக வாழ்த்துகள்!

வவ்வால் said...

வணக்கம் பெபி!
என்ன பிளாக் போட்ட பிறகு இந்த பக்கமே வரலையா? ம்ம் நான் வந்து வந்து பார்த்துட்டு இருக்கேன் புது எதும் வந்து இருக்கானு! நல்லா எழுதுறிங்க நிறைய எழுதுங்க ,ஆவலுடன் இருக்க படிக்க !

வவ்வால் said...

ம்ம் அதுக்கு அப்புரம் இந்த பக்கமே வரலையா? ரொம்ப வேலை பளுவோ? சுறு சுறுப்பா வந்து அடுத்த பதிவை போடுங்க! ஆவலுடன் காத்திருக்கேன்!

நரியா said...

வணக்கம் சௌமியா,
ஆஹா என்ன கவிதை. ரொம்ப நல்லா இருக்கு.

"ஆறு" விளையாட்டிற்கு நண்பர்களைத் தேடிக் கொண்டிருந்தேன். நீங்க மாட்டுனீங்க :)).

உங்களை ஆறு விளையாட்டிற்கு அழைக்கிறேன். இதோ இந்த தளத்திற்கு சென்று 10 ஆவது பதிவின் கீழ் பாருங்கள்.

http://siriyapaarvai.blogspot.com/

உங்களின் விருப்பமான "ஆறு" களைப் பற்றி நாங்களும் தெரிந்துக் கொள்கிறோம்.

நன்றி!!
நரியா

Sowmya said...

hey naria..am surprised to see u here..piditha 6 vishayangala?? ethu patri..

நரியா said...

சௌமியா,
பிடித்த ஆறு எதைப் பற்றி வேணும்னாலும் இருக்கலாம்.

பொதுவா, என் ப்ளாக்ல பின்னூட்டம் போடுறவங்க ப்ரொஃபைல் பார்ப்பேன். அப்படியே அவங்க ப்ளாகிக்கும் சென்று பதிவுகளைப் படிப்பேன்.

நன்றி!
நரியா

ரவி said...

நல்வரவு செளமியா அவர்களே..

Sowmya said...

hmm manasu pathi article aa geetha..ellar manathum ondraye ninaipathillaye...avaravar manathu avaravar arivar...hehe...yen da article kettom nu thonirukum....manam pathi pothuva pesa mudiathu...ungal seyal patri pesumpothu ungal manam eppdi irukirathu enbathai thaniyaga kuripida mudiume andri, pothuvaga enna solla endru theriavillai..thanks for asking gee..

Sowmya said...

hi mr.ravi..

Thanks for ur frdly gesture..